உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, இணை தயாரிப்பு மற்றும் இயக்குனராக பணியாற்றிய ‘விஸ்வரூபம்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் சென்னை, மும்பையில் எடுக்கப்பட்டன.
இந்திய திரையுலகின் முதல் முயற்சியாக ‘அவ்ரோ 3டி’ என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ளது. சங்கர் எசான்லாய் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை தமிழில் கவிஞர் வைரமுத்துவும் இந்தியில் ஜாவீத் அக்தரும் எழுதியுள்ளனர்.
‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழா, கமலஹாசனின் 58-வது பிறந்த நாளான வருகிற நவம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் ஒரே நாளில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. 3 நகரங்களிலும் ஒரேநாளில் கமலஹாசன் சென்று விழாவில் பங்கேற்று சி.டி.க்களை வெளியிடுகிறார்.
கமலஹாசனின் பிறந்த நாளும் ‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழாவும் தமிழ்நாட்டின் 3 நகரங்களில் ஒரே நாளில் நடைபெறுவதால், விழாக்களை கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment