Saturday, 29 September 2012

விமர்சனம்-தாண்டவம்


பார்வையில்லாமல் தானே ஒரு ஒலியை எழுப்பி அதை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம். சாலையோரம் நின்றிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார்

Sunday, 23 September 2012

அஜித், நாகார்ஜுனா படங்களில் மீண்டும் நயன்தாரா தீவிரம்.


நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா, ஜோடியாக தெலுங்கு படத்திலும் அஜீத் ஜோடியாக தமிழ் படமொன்றிலும் நடிக்கிறார். தெலுங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

Saturday, 22 September 2012

அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்ய


ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டுள்ளனர். இக்குழந்தையை பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க இதுவரை அனுமதிக்கப்படவில்லை. பொது இடங்களில் குழந்தை முகத்தை முடியே கொண்டு

Friday, 21 September 2012

சாட்டை-சினிமா-விமர்சனம்.


தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும். பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.

நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால் வகுப்புகளை கட் அடிக்கும் ஆசியர்கள், மாணவர்களால் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கிறது அந்த பள்ளி.

இந்நிலையில், இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார். பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது.

இதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது. தம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே, அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.

இதேவேளையில், 12-ம் வகுப்பு படிக்கும் நாயகன் யுவன், அதே வகுப்பில் படிக்கும் நாயகி மகிமாவுக்கு தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறான். இதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

அவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா? மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா? யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.

ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். நிதானமான அளவான நடிப்பு. மாணவர்களுக்கு சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள சிரமத்தை குறைக்கும்.

உதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்துவிட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது.

தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

படத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார்.

நாயகி புதுமுகம் மகிமா, தமிழ் சினிமாவுக்கு அழகான கதாநாயகி கிடைத்திருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித பாவனைகள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.

இசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’ ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன.

அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.

மொத்தத்தில் ‘சாட்டை’ சுழற்றிய விதம் மிகவும் அருமை.
TAG:சினிமா- விமர்சனம்.

Wednesday, 19 September 2012

துள்ளி எழுந்தது காதல் -விமர்சனம்.


ராஜாவுக்கு உடன் படிக்கும் ஹரிப்பிரியா மீது கண்டதும் காதல். ஹரிப்பிரியாவுக்கும் ராஜா மீது காதல். இருவரும் காதலை சொல்லாமல் பழகுகிறார்கள். ஒரு முறை நண்பர்கள் இணைந்து பெங்களூருக்கு டூர் செல்லும்போது ராஜாவும், ஹரிப்பிரியாவும் ஓர் இரவை தனியாக கழிக்க வேண்டிய

எதிர்கால சந்ததிக்காக ஒரு பிசினஸ்!


வரகு, திணை, சாமை, கம்பு, சோளம், சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி... பறித்த பசுமை மாறாத கீரை வகைகள்... உயிர்ப்போடு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் காய்கறிகள்... கலப்படம் கொஞ்சமும் இல்லாத உணவு வகைகள்... எங்கே கிடைக்கும்? சென்னை அடையாறில் இருக்கும் ரீஸ்டோரில் கிடைக்கும்! இங்கே முதலாளியும் இல்லை... தொழிலாளியும் இல்லை எல்லோருமே தன்னார்வலர்கள் என்பது கூடுதல் ஆச்சரியம்!
       ரீஸ்டோர் வாலண்டியர்களில் ஒருவரான ராதிகா சொல்கிறார்... ‘‘இன்னிக்கு நாம சாப்பிடுற உணவு ஆரோக்கியமானது இல்ல. பயிர்கள்ல உரம், பூச்சி மருந்தை அதிகமாப் போட்டு, விஷமாக்கிடுறாங்க. அதைத்தான் காசு குடுத்து சாப்பிடுறோம். தாத்தா, பாட்டிகள் கடைசி காலம் வரை திடகாத்திரமா இருந்த நிலைமை போய், இன்னிக்கு 15 வயசுலயே டயாபடீஸ் வந்துடுது. காரணம், உணவில் சத்தில்லை. அதோட பாரம்பரிய உணவை மறந்துட்டு வெளிநாட்டு உணவு வகைகளைத் தேடித் தேடி சாப்பிடுறோம்.

இன்னொரு பக்கம், விளைந்த பொருட்களை விற்க முடியாம விவசாயிகள் தவிக்கிறாங்க. இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ரீஸ்டோர்’. பாரம்பரியத்தை மீட்டுக் கொண்டு வர்றதுதான் எங்க நோக்கம். சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல விவசாயிகளிடம் நேரடியா உணவுப் பொருட்களை வாங்கி, விக்கிறோம். சமையலுக்கு தேவைப்படுற அத்தனையும் இங்கே கிடைக்கும்.
         பருப்பு, மாவு, செக்குல ஆட்டின சுத்தமான எண்ணெய், ட்ரைஃப்ரூட்ஸ், அரிசி, சிறு தானியங்கள்னு எல்லாமே இயற்கையா விளைஞ்ச தரமான பொருட்கள்.  ‘பாசுமதி’ பஞ்சாப்ல கிடைக்கிற உயர்ரக அரிசி. நம்ம ஊர் சீரக சம்பா அரிசிக்குப் பக்கத்தில கூட அது வரமுடியாது. சீரக சம்பாவுல அவ்வளவு சத்து இருக்கு. இதையெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கிறோம். வரகு, திணை, கம்பு விளையுற இடங்கள், அதிலுள்ள சத்துகள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கோம். இன்னிக்கு தேன்ல கூட கலப்படம்! நாங்க விக்கறது இயற்கையா கிடைக்கிற தேன்!
         பண்டிகை நாட்கள்ல பாரம்பரிய உணவுகளை தயார் செஞ்சு கொடுக்குறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கிற மூலிகை சோப், ஷாம்பு, குளியல் பவுடர் கூட இங்கே இருக்கு. ஊறுகாய், இன்ஸ்டன்ட் பவுடர், இயற்கை உரத்துல விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கீரைகளும் கிடைக்கும். முதலாளி, தொழிலாளி பாகுபாடு இல்லாம ரீஸ்டோரை ஆரம்பிச்சோம். எல்லாருமே தன்னார்வலர்கள்தான். சம்பாதிக்கறது எங்க நோக்கமில்ல. அடுத்த சந்ததியினர் ஆரோக்கியமா இருக்கணும்... அவ்வளவுதான்.
வாரத்துல ரெண்டு நாள், செவ்வாய்க்கிழமை மதியம் ரெண்டு மணியில இருந்தும், சனிக்கிழமை சாயங்காலம் நாலு மணியில இருந்தும் காய்கறிகள், பழங்களுக்கான பஜார் நடக்கும். காய்கறி வாங்க வெறும் கையோட யாரும் இங்கே வர முடியாது. பிளாஸ்டிக் கவருக்கு தடை போட்டிருக்கோம்.
இது எங்களோட முதல் முயற்சி. அடுத்தக்கட்டமா வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகள் உற்பத்தி பண்ணுற வித்தையை கத்துத் தரப்
போறோம். அழகுக்காக குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கறதை விட்டுட்டு மொட்டை மாடியில சின்னதா தோட்டம் போட்டா கீரைகள், காய்கறிகள் கிடைக்கும். அதுக்காகத்தான் ‘ரீஸ்டோர் கார்டன்’ அமைப்பை உருவாக்கியிருக்கோம்.
எங்களைப் பார்த்து மற்றவர்களும் இந்த முயற்சியை செஞ்சா அது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. சூப்பர் மார்க்கெட்ல ஃப்ரீசர்ல வச்சிருக்குற உணவை வாங்கி உடம்பை கெடுத்துக்குறதை விட்டுட்டு, நாம உற்பத்தி செஞ்ச காய்கறிகள்ல சமைச்சு, மிச்சமிருக்குற நாட்களை ஆரோக்கியமா வச்சுக்க எல்லாரும் முன்வரணும். பாரம்பரிய தானியங்கள்ல இருக்குற சத்துகளையும் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போயே ஆகணும்’’ என்கிறார் ராதிகா.

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி


நடிகர், நடிகைகள் வீடுகளிலும், படப்பிடிப்பு தளங்களிலும் விநாயகர் சதுர்த்தியை இன்று கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள். இனிப்பு பண்டங்கள் செய்தும் சாப்பிட்டனர்.

பிரியாமணி கூறும்போது,

சிங்கம்-2 படத்தில் இரு நாயகிகள்: அனுஷ்காவுடன் நடிக்க ஹன்சிகா தயக்கம்


நடிகர் சூர்யா நடித்த ஹிட்டான படம் சிங்கம். இதில் ஜோடியாக அனுஷ்கா நடித்தார். ஹரி இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2’

Tuesday, 18 September 2012

அதிகம் அறியப்படாத பரளிக்காடு-சுற்றுலா.


கோவை:
 கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம்.
முன் பதிவு:
குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை

பிரகாஷ்ராஜ்,மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடினார்.


பிரகாஷ்ராஜ் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கும் ‘கவுரவம்’ படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகிறார்.

இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பிசியாக இருந்ததால் இருவரும் சேர்ந்து வெளியே செல்வது அரிதாக இருந்தது.




இந்த நிலையில் போனி வர்மா பிறந்தநாளையொட்டி அவரை தாஜ்மகாலுக்கு அழைத்து சென்று பிரகாஷ்ராஜ் சந்தோஷப்படுத்தினார். இருவரும் தாஜ்மகால் முன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று போனி வர்மா கூறினர்.

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய 'டாப் 10' படங்கள்


இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 'முகமூடி'யை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் 'மன்னாரு', 'சுந்தரபாண்டியன்', 'பாகன்', படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த 'நான் ஈ' படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வந்த 'வேட்டை' படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த 'நண்பன்' படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த 'மெரீனா' படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. 'அம்புலி 3டி' படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

'கலகலப்பு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'அட்டகத்தி' படங்கள் நன்றாக ஓடின. 'வழக்கு எண் 18/9', 'கழுகு', 'உருமி', 'நான்' படங்களும் பேசப்பட்டன. 'பில்லா 2', 'தோனி', '3', 'சகுனி', 'முகமூடி' படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன

Saturday, 15 September 2012

நெல்லை சந்திப்பு-விமர்சனம்.


பாசமான குடும்பத்தின் பொறுப்பான மகன் ரோஹித். கல்லூரி முடித்து விட்டு கம்ப்யூட்டர் பயிற்சி பெறுகிறார். தீவிரவாதிகள் நாட்டுக்குள் புகுந்தால் போலீசுக்கு தெரியப்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவரையே தீவிரவாதியாக்குகிறது போலீஸ். பக்கத்துவீட்டில் ஒரு பெண் பாலியல் தொழில் செய்வதால் வீட்டை காலி செய்து விட்டு வேறொரு வீட்டுக்கு

<சுந்தரபாண்டியன்>சினிமா விமர்சனம்


<சுந்தரபாண்டியன்>சினிமா விமர்சனம்

‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ படவரிசையில் நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணியும் ஹீரோவின் கதைதான் ‘சுந்தரபாண்டியன்’. நண்பனின் காதலுக்காக தான் ஏற்கனவே பின்னால் சுற்றிய ஹீரோயின் லட்சுமி மேனனிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் லட்சுமி மேனன் சசிகுமாரை இப்போது விரும்புவதாக கூறுகிறாள். சசிகுமாரும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் அப்புக்குட்டி லட்சுமிமேனனை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் அப்புக்குட்டியுடன் ஏற்படும் மோதலில், தவறுதலாக அப்புக்குட்டி இறந்துவிட, கொலைப்பழியை சசிகுமார் ஏற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில், சசிகுமாரின் காதல் விவகாரம் லட்சுமி மேனனின் வீட்டுக்கு தெரிந்துவிட, அவளது முறைப் பையனான விஜய் சேதுபதிக்கு திருமணம் முடித்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், லட்சுமி மேனன் முறைப் பையனை மணமுடிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

சசிகுமாரின் ஆழமான காதலை புரிந்து கொண்ட லட்சுமி மேனனின் அப்பா இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இதனால் கோபமடைந்த லட்சுமி மேனனின் முறைப்பையனும், இறந்து போன அப்புக்குட்டியின் நண்பனும் சேர்ந்து சசிகுமாரை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இவர்களோடு சசிகுமாரின் நண்பனும் சேர்ந்து கொள்கிறான்.

இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.



சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாதியில் ‘புரோட்டோ’ சூரியோடு இவர் செய்யும் கலாட்டாக்கள் நம் வயிற்றை பதம் பார்க்கின்றன. ரஜினி ரசிகராக பஸ்சில் இவர் செய்யும் அலப்பறை செம கலகலப்பு.

ஹீரோயின் ‘கும்கி’ லஷ்மி நாயர். பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு. தமிழ் சினிமாவுக்கு கிராமத்துப் பெண்ணாக, நன்றாக நடிக்கத் தெரிந்த மற்றொரு ஹீரோயின் கிடைத்திருக்கிறார். பஸ்சில் தன் பின்னால் சுற்றும் சசிகுமாரை முறைப்பதில், தன் பார்வையிலே பேசுகிற தொனி அருமை.

படத்தில் இடைவேளை வரை சூரி கலகலப்பூட்டியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.

ஹீரோயின் பின்னாலேயே சுற்றும்  ‘ரோமியோ’வாக அப்புக்குட்டி. இவர் வலிந்து வலிந்து தனது மேனரிசம்களை காட்டி ஹீரோயினை வளைக்க நினைப்பது கலகலப்பூட்டும் காமெடி.

விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலும், கதைக்கு பலம் கூட்டும் கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.

சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், ஹீரோயினின் அப்பாவாக வரும் தென்னவன், சசிகுமாரின் நண்பன் இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டியின் நண்பன் சௌந்தர ராஜா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் படத்தின் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. கதை நடக்கும் உசிலம்பட்டி ஏரியாவை பிரேம்குமாரின் ஒளிப்பதிவு நேரில் பார்த்தது போன்ற உணர்வை நமக்கு தருகிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சிகளிலும், பைக்கில் பயணம் செய்யும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை.

படத்தின் ஆரம்பத்திலேயே உசிலம்பட்டி ஏரியா பற்றிய ஒரு சிறு தொகுப்பை ரசிகர்களுக்கு யதார்த்தம் தவறாமல் பதிவு செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். இடைவேளைவரை சினிமாத்தனம் இல்லாமல் கலகலப்பாக கதை நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப்பின் அது கொஞ்சம் தலைதூக்குகிறது. இருந்தாலும், முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் அதனை பதிவு செய்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் சசிகுமாரை மீட்ட ‘சுந்தரபாண்டியன்’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.
Key word:<சுந்தரபாண்டியன்> சினிமா விமர்சனம்

காணிக்கை